Pin It

Widgets

ஆமென்

Friday, December 14, 2012 | 0 comments »


சந்தேகத்தின் பெயரில் தொடரும்
தொடர் துரோகங்கள் என்னை
யார் என எனக்கு அறிமுகம் செய்கிறது

புறம் தள்ளுதலில் நிகழும் அகத்தின்
வெறுமையில் நெருங்கும் ப்ரியத்தின் கைகள்
தூக்கு கையிறுகளாய் பாவிக்கின்றன

இயலாமையின் கோபம் தனிப்பதற்காக
உங்கள் கரிசனத்தில் எரிச்சலுறும்
பொழுதுகளில் திட்டிக் கொள்கிறேன்

தன்னைத்தானே அமைதி படுத்துதல்
உங்களுடனான அனுசரித்தல்
சுயத்தின் நேசம் தேடுதல் என

வாழ்தல் பற்றி தெளிவுறாத
புரிதலற்ற வாழ்வு எனது என்பதை
நீங்களும் அறிந்து கொள்வீராக!

ஆமென்

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets