யாருமற்றதாய் உணரும் காலங்களிலெல்லாம்
உனக்கொரு கடிதம் எழுதிட
மனம் முயன்று பின்பு தவிர்த்துவிடுகிறேன்
எதெற்கென கனிக்கமுடியாமல்,
உனக்கொரு கடிதம் எழுதிட
மனம் முயன்று பின்பு தவிர்த்துவிடுகிறேன்
எதெற்கென கனிக்கமுடியாமல்,
மனம் சுமக்கும் உருவமில்லா சுமையோடு
அந்திப்பொழுதுகளில் பற்றி எரிகிறேன்
காடுகள் அழிந்து கூடுகளற்று
மணலற்ற பூமியில் முட்டையிட்டு
முட்டையுடைந்து அழியப்போகும் பறவைகள் போல
உன் அன்பின் கருவில் என்னுள் விளையும்
துளிகளையும் ஏனைய சொற்களையும்
அழித்துக்கொள்ளப்போகிறேன், கொல்லப்போகிறேன்
என் வனாந்தரத்தில் முளைத்திருக்கும்
ஒற்றை ஆலமரமாய் அதில்-நீ மட்டும்
சொற்களின் விழுதூன்றி நிரந்தரமாகியிருக்கிறாய்
நானென நீ அறியாத வண்ணம்
உதிர்ந்து கொண்டிருப்பேன்
ஒவ்வொரு இலையாய் ஒவ்வொரு இலையாய்!
அந்திப்பொழுதுகளில் பற்றி எரிகிறேன்
காடுகள் அழிந்து கூடுகளற்று
மணலற்ற பூமியில் முட்டையிட்டு
முட்டையுடைந்து அழியப்போகும் பறவைகள் போல
உன் அன்பின் கருவில் என்னுள் விளையும்
துளிகளையும் ஏனைய சொற்களையும்
அழித்துக்கொள்ளப்போகிறேன், கொல்லப்போகிறேன்
என் வனாந்தரத்தில் முளைத்திருக்கும்
ஒற்றை ஆலமரமாய் அதில்-நீ மட்டும்
சொற்களின் விழுதூன்றி நிரந்தரமாகியிருக்கிறாய்
நானென நீ அறியாத வண்ணம்
உதிர்ந்து கொண்டிருப்பேன்
ஒவ்வொரு இலையாய் ஒவ்வொரு இலையாய்!
0 comments
Post a Comment