Pin It

Widgets


மெளனத்தில் உள்ளூறும்
மரணம் பற்றியதான எண்ணங்களில்
அகால மரணமா கண்ணீர் அஞ்சலியாவென

நொடிக்கொருமுறை மூச்சுத்திணறத் திணற
என் மிதான பிடிமானங்கள் உடையுமளவிற்கு
கேட்டுக்கொள்கிறேன் நான் என்னிடம்

சுமத்தலின் பாரம் அடுத்தவர் அறியாத
மனச்சுமையோடு கேள்விக்கனைகள் எழுப்பி
விடையறியாது உழல்கிறேன் உமிழமுடியாமல்

ஒரு பாவ மன்னிப்பிற்கோ பாவத்திற்கோ
துணிந்திடாத வாடகை உடலுக்கு
தினம் ஒரு காயமென பரிசளிப்பதைவிட

உயிர் கொடுத்தவனிடம் உயிரை
திருப்பிக்கொடுக்கும் வழியும் கால அவகாசமும்
எவ்வளவு என்று கேட்டுவருகிறேன்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets