மெளனத்தில் உள்ளூறும்
மரணம் பற்றியதான எண்ணங்களில்
அகால மரணமா கண்ணீர் அஞ்சலியாவென
நொடிக்கொருமுறை மூச்சுத்திணறத் திணற
மரணம் பற்றியதான எண்ணங்களில்
அகால மரணமா கண்ணீர் அஞ்சலியாவென
நொடிக்கொருமுறை மூச்சுத்திணறத் திணற
என் மிதான பிடிமானங்கள் உடையுமளவிற்கு
கேட்டுக்கொள்கிறேன் நான் என்னிடம்
சுமத்தலின் பாரம் அடுத்தவர் அறியாத
மனச்சுமையோடு கேள்விக்கனைகள் எழுப்பி
விடையறியாது உழல்கிறேன் உமிழமுடியாமல்
ஒரு பாவ மன்னிப்பிற்கோ பாவத்திற்கோ
துணிந்திடாத வாடகை உடலுக்கு
தினம் ஒரு காயமென பரிசளிப்பதைவிட
உயிர் கொடுத்தவனிடம் உயிரை
திருப்பிக்கொடுக்கும் வழியும் கால அவகாசமும்
எவ்வளவு என்று கேட்டுவருகிறேன்!
கேட்டுக்கொள்கிறேன் நான் என்னிடம்
சுமத்தலின் பாரம் அடுத்தவர் அறியாத
மனச்சுமையோடு கேள்விக்கனைகள் எழுப்பி
விடையறியாது உழல்கிறேன் உமிழமுடியாமல்
ஒரு பாவ மன்னிப்பிற்கோ பாவத்திற்கோ
துணிந்திடாத வாடகை உடலுக்கு
தினம் ஒரு காயமென பரிசளிப்பதைவிட
உயிர் கொடுத்தவனிடம் உயிரை
திருப்பிக்கொடுக்கும் வழியும் கால அவகாசமும்
எவ்வளவு என்று கேட்டுவருகிறேன்!
0 comments
Post a Comment