வீதியெங்கும் தேங்கிக்கிடக்கும் மழை நீரில்
புதுப்பாவடை சட்டையை பார்த்துப்பார்த்து
ரசித்து கடந்து கொண்டிருந்தாள் சஹானா
அம்மா தொடுத்து வைத்துவிட்ட பூக்கள் உதிர்த்து
புதுப்பாவடை சட்டையை பார்த்துப்பார்த்து
ரசித்து கடந்து கொண்டிருந்தாள் சஹானா
அம்மா தொடுத்து வைத்துவிட்ட பூக்கள் உதிர்த்து
தேங்கிய பள்ளங்களுக்கு ஒன்றென
நார் மட்டும் மிச்சம் வைத்திருக்கிறாள்
கலைந்திட்ட கூந்தல் முன்னெற்றியில்
அவள் ஆடிய நடனத்தை அரங்கேற்ற
அம்மாவுடனான பாடலை தனியே பாடுகிறாள்
கருவிழிக்கு போட்டியாய் மேகம் போட்டியிட
முன்னமே அறுந்திட்ட பாசியின் முத்துக்களை
சட்டையில் மடித்தவளாய் நடை போடுகிறாள்
அருந்த பாசியின் உதிர்ந்து தொலைந்தது போக
மிதமிருந்தது கண்டு அம்மா திட்டவும்
அழுது கொண்டு சஹனா சொல்கிறாள்
உன் வயிற்றிலிருக்கும் குட்டி பாப்பாவுக்கு
சின்னதாய் பாசி கோர்த்து போடலாம்மா என்று!
நார் மட்டும் மிச்சம் வைத்திருக்கிறாள்
கலைந்திட்ட கூந்தல் முன்னெற்றியில்
அவள் ஆடிய நடனத்தை அரங்கேற்ற
அம்மாவுடனான பாடலை தனியே பாடுகிறாள்
கருவிழிக்கு போட்டியாய் மேகம் போட்டியிட
முன்னமே அறுந்திட்ட பாசியின் முத்துக்களை
சட்டையில் மடித்தவளாய் நடை போடுகிறாள்
அருந்த பாசியின் உதிர்ந்து தொலைந்தது போக
மிதமிருந்தது கண்டு அம்மா திட்டவும்
அழுது கொண்டு சஹனா சொல்கிறாள்
உன் வயிற்றிலிருக்கும் குட்டி பாப்பாவுக்கு
சின்னதாய் பாசி கோர்த்து போடலாம்மா என்று!
0 comments
Post a Comment