Pin It

Widgets


வீதியெங்கும் தேங்கிக்கிடக்கும் மழை நீரில்
புதுப்பாவடை சட்டையை பார்த்துப்பார்த்து
ரசித்து கடந்து கொண்டிருந்தாள் சஹானா

அம்மா தொடுத்து வைத்துவிட்ட பூக்கள் உதிர்த்து
தேங்கிய பள்ளங்களுக்கு ஒன்றென
நார் மட்டும் மிச்சம் வைத்திருக்கிறாள்

கலைந்திட்ட கூந்தல் முன்னெற்றியில்
அவள் ஆடிய நடனத்தை அரங்கேற்ற
அம்மாவுடனான பாடலை தனியே பாடுகிறாள்

கருவிழிக்கு போட்டியாய் மேகம் போட்டியிட
முன்னமே அறுந்திட்ட பாசியின் முத்துக்களை
சட்டையில் மடித்தவளாய் நடை போடுகிறாள்

அருந்த பாசியின் உதிர்ந்து தொலைந்தது போக
மிதமிருந்தது கண்டு அம்மா திட்டவும்
அழுது கொண்டு சஹனா சொல்கிறாள்

உன் வயிற்றிலிருக்கும் குட்டி பாப்பாவுக்கு
சின்னதாய் பாசி கோர்த்து போடலாம்மா என்று!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets