Pin It

Widgets


ஒரு பாதசாரியின் மனஉறுதி போல
புதிதாய் தடம் பதிக்கிறேன்
நீ இல்லாத உனை கூட்டிக்கொண்டு

இலைகளற்ற மரங்களின் கிளைகளில்
காய்ந்து போன சதைத்துண்டுளின்
வாடை வீசியபடி பயணிக்கிறது பாதை

பயமற்ற பைத்தியக்காரனைப்போல
உனை முன்னிறுத்தி உன் மொழிபேசி
இதயத்துடிப்பின் ஓசையில் நடக்கிறேன்

எனை முந்திப்போன உன் பிம்பத்தின்
சீழ்வடிந்த வாடைக்கொண்டு
உன் இருப்பின் அடையாளம் காண்கிறேன்

அங்கே
என்னைபோல் ஒருவன் அழுதுகொண்டிருக்கிறான்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets