Pin It

Widgets

இப்படியாய்

Friday, December 14, 2012 | 0 comments »

இலையுதிர் கால சருகுகள் பாதம்சூழ
எதோ சத்தம் கேட்டவள் போல
பக்கவாட்டில் விழியுருட்டி
நடந்து சென்று கொண்டிருக்கிறாள்

அருகிலோடும் நீரோடையில்
நீர் கிழிக்கும் பாம்பொன்றின் வேகத்தை
அம்பெய்து வெளியேறும் வில்லின்
மடிப்பு அளவிற்கொரு பார்வை குறுக்கி

நரம்புகளென பின்னலிட்டுக் கிடக்கும்
இலையற்ற கிளைகளில் கூடுஒன்று கண்டு
பரிதாபப்படும் அன்பின் மொழியை
விழிகளால் முத்தமிட்டுச் செல்கிறாள்

வாடைக்காற்றில் சில்லிட்ட கைகளை
உள்ளங்கை உரசி கன்னத்தில் ஒத்தடமிட்டு
பனியென உருகியவளாய்
காதல் குழைத்து பார்வையை நழுவவிடுகிறாள்

இப்படியாக
வேண்டுமென்றே மறுத்திடும் அவளின்
முத்தத்திற்கான முகபாவனையை
குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன் ஓவியமாக!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets