Pin It

Widgets


காகங்களின் இறக்கைகளும் கண்ணாடியும்
நீண்ட கம்பில் வெள்ளைத் துணிகளும்
நூல்களும் காற்றிலாடிக்கொண்டிருந்தன

புறாக்களுக்கும் காக்கைகளுக்கும்
எச்சரிக்கையென ஐந்து வயது மகளுக்கு
சொல்லிக்கொண்டிருந்தாள் தாய்

நெல்மணிகளும் கடலைகளும் காயும்
அந்த மொட்டைமாடியில்
கேள்விகளால் படிக்கட்டு செய்தாள் மகள்

ஒவ்வொரு கேள்விகளிலும்
உதிரும் விடைகளும் எழும் எதிர் கேள்விகளும்
முன்பொறுமுறை சொன்ன கதையினையும்

நினைவூகூர்ந்தவள் பொய்யாவென கேட்க
தாயின் மெளனத்தால் மகளிடம் மனிதம் பிறந்து
கடவுள் கேள்விக் குறியானார் மனதில்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets