சிலையென நகரும் பிம்பமொன்று
தினம் தினம் கனவில் வந்து நின்று
தூக்கம் திருடிப்போகுதே விழிகள் தின்று
அனுதினம் அதன் உருவம்கொண்டு
விடிந்ததும் விழி வீதி சென்று
தொலைந்திட தொலைந்திட தேடத்தூண்டுதே
மேகங்கள் கூடிப்பொழியும் தூரல்கள்
அதில் நனைந்தாடிடும் மென்பாதங்கள்
பொருந்திட விரைந்தோடுது ஏக்கங்கள்
நெருங்கி நெருங்கி கண்கள் விரிந்திட
கொங்கைகள் இரண்டும் உள்ளம் கவர்ந்திட
கனவினில் தின்ற சுவை கூந்தாடுதே
வளைந்து அகன்ற கொடியிடை நெளிய
பிசைந்து அறுந்திட்ட மணிமுத்துக்கள் மிளிர
உயிர்கொடியில் தங்கிட்ட நீர்கண்டு கூச்சல்போடுதே
முன் நெற்றியில் விழுந்த ஒற்றைத் தூரிகை
அகன்று ஒடுங்கும் தோள் கொண்ட தாரிகை
பச்சை நரம்பு கழுத்தில்கண்டு இச்சை கூடுதே
கண்கள் தின்ற கண்கள் கண்டு செவ்விதழ் கொய்து
இடைதாண்டி ஆடிடும் கூந்தல் தொட்டபாகம் தொட்டு
கொஞ்சம் கொஞ்சமாய் பருகிட படர்ந்திட
பனிபோல் உருகியோடியது அவள் தேகம்!
தினம் தினம் கனவில் வந்து நின்று
தூக்கம் திருடிப்போகுதே விழிகள் தின்று
அனுதினம் அதன் உருவம்கொண்டு
விடிந்ததும் விழி வீதி சென்று
தொலைந்திட தொலைந்திட தேடத்தூண்டுதே
மேகங்கள் கூடிப்பொழியும் தூரல்கள்
அதில் நனைந்தாடிடும் மென்பாதங்கள்
பொருந்திட விரைந்தோடுது ஏக்கங்கள்
நெருங்கி நெருங்கி கண்கள் விரிந்திட
கொங்கைகள் இரண்டும் உள்ளம் கவர்ந்திட
கனவினில் தின்ற சுவை கூந்தாடுதே
வளைந்து அகன்ற கொடியிடை நெளிய
பிசைந்து அறுந்திட்ட மணிமுத்துக்கள் மிளிர
உயிர்கொடியில் தங்கிட்ட நீர்கண்டு கூச்சல்போடுதே
முன் நெற்றியில் விழுந்த ஒற்றைத் தூரிகை
அகன்று ஒடுங்கும் தோள் கொண்ட தாரிகை
பச்சை நரம்பு கழுத்தில்கண்டு இச்சை கூடுதே
கண்கள் தின்ற கண்கள் கண்டு செவ்விதழ் கொய்து
இடைதாண்டி ஆடிடும் கூந்தல் தொட்டபாகம் தொட்டு
கொஞ்சம் கொஞ்சமாய் பருகிட படர்ந்திட
பனிபோல் உருகியோடியது அவள் தேகம்!
0 comments
Post a Comment