Pin It

Widgets


சிலையென நகரும் பிம்பமொன்று
தினம் தினம் கனவில் வந்து நின்று
தூக்கம் திருடிப்போகுதே விழிகள் தின்று

அனுதினம் அதன் உருவம்கொண்டு
விடிந்ததும் விழி வீதி சென்று
தொலைந்திட தொலைந்திட தேடத்தூண்டுதே

மேகங்கள் கூடிப்பொழியும் தூரல்கள்
அதில் நனைந்தாடிடும் மென்பாதங்கள்
பொருந்திட விரைந்தோடுது ஏக்கங்கள்

நெருங்கி நெருங்கி கண்கள் விரிந்திட
கொங்கைகள் இரண்டும் உள்ளம் கவர்ந்திட
கனவினில் தின்ற சுவை கூந்தாடுதே

வளைந்து அகன்ற கொடியிடை நெளிய
பிசைந்து அறுந்திட்ட மணிமுத்துக்கள் மிளிர
உயிர்கொடியில் தங்கிட்ட நீர்கண்டு கூச்சல்போடுதே

முன் நெற்றியில் விழுந்த ஒற்றைத் தூரிகை
அகன்று ஒடுங்கும் தோள் கொண்ட தாரிகை
பச்சை நரம்பு கழுத்தில்கண்டு இச்சை கூடுதே

கண்கள் தின்ற கண்கள் கண்டு செவ்விதழ் கொய்து
இடைதாண்டி ஆடிடும் கூந்தல் தொட்டபாகம் தொட்டு
கொஞ்சம் கொஞ்சமாய் பருகிட படர்ந்திட

பனிபோல் உருகியோடியது அவள் தேகம்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets