உன் பிரிவில் முளைத்துக்கிடக்கும்
என் ஞாபகச் செடிகளில்
காய்த்துக்கிடக்கிறது கண்ணீர் துளிகள்
வேலியின்றி அலையும் எண்ண மிருகம்
என்னைத்தின்று அதன் எச்சத்தில்
மீண்டும் பரவிக்கிடக்கிறது ஞாபகங்களாய்
ஒரு நலம் விசாரிப்பில் தீர்ந்துவிடாத
உனதன்பின் காலங்களை எண்ணி
தொலைபேசி துண்டிப்பில் வருந்துகிறேன்
உன் வருகையின் காலம் அறிந்தும்
பிரியத்தின் கதகதப்பினை வேண்டும்
மனதினை பதியமிட்டு வைத்திருக்கிறேன்
உதடுகள் பிரியாது முளைவிடும்
மன ஒலிக்கு
மெளனம் என்று பெயரிட்டிருக்கிறேன்
என் ஞாபகச் செடிகளில்
காய்த்துக்கிடக்கிறது கண்ணீர் துளிகள்
வேலியின்றி அலையும் எண்ண மிருகம்
என்னைத்தின்று அதன் எச்சத்தில்
மீண்டும் பரவிக்கிடக்கிறது ஞாபகங்களாய்
ஒரு நலம் விசாரிப்பில் தீர்ந்துவிடாத
உனதன்பின் காலங்களை எண்ணி
தொலைபேசி துண்டிப்பில் வருந்துகிறேன்
உன் வருகையின் காலம் அறிந்தும்
பிரியத்தின் கதகதப்பினை வேண்டும்
மனதினை பதியமிட்டு வைத்திருக்கிறேன்
உதடுகள் பிரியாது முளைவிடும்
மன ஒலிக்கு
மெளனம் என்று பெயரிட்டிருக்கிறேன்
0 comments
Post a Comment