Pin It

Widgets


உன் பிரிவில் முளைத்துக்கிடக்கும்
என் ஞாபகச் செடிகளில்
காய்த்துக்கிடக்கிறது கண்ணீர் துளிகள்

வேலியின்றி அலையும் எண்ண மிருகம்
என்னைத்தின்று அதன் எச்சத்தில்
மீண்டும் பரவிக்கிடக்கிறது ஞாபகங்களாய்

ஒரு நலம் விசாரிப்பில் தீர்ந்துவிடாத
உனதன்பின் காலங்களை எண்ணி
தொலைபேசி துண்டிப்பில் வருந்துகிறேன்

உன் வருகையின் காலம் அறிந்தும்
பிரியத்தின் கதகதப்பினை வேண்டும்
மனதினை பதியமிட்டு வைத்திருக்கிறேன்

உதடுகள் பிரியாது முளைவிடும்
மன ஒலிக்கு
மெளனம் என்று பெயரிட்டிருக்கிறேன்

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets