அவன் அவளுக்கு வரிசையில் ஒருத்தனென
அறிந்தபின்னும் மனவிருப்பத்தை
கடிதமெழுத முடிவெடுத்திருந்தான்
அவனுக்கு அவள் முதலாம் அழகி என்பதாலும்
அதுவே கடைசியெனவும் தீர்மானித்து
சாளரத்தில் கூடுகட்டி வாழும் அணில்களின்
மெல்லிசைக்கு காதுகொடுத்துவிட்டு
கண்ணாடிப்பேழையிலான ஓவியமொன்றின்
நிர்வாணத்தை ரசித்துக்கொண்டிருந்தான்
பாதி தூக்கத்தில் ஒளிரும் கருவிழியை
முழுவதுமாய் ஆக்கிரமிக்கவேண்டுமென
புரளும் பக்கமெல்லாம் வந்தமர்ந்தான்
வாடிக்கையாளர்கள் கடன்சொல்லிப்போக
பெயரும் பணமும் குறிப்பெடுத்துவைக்கும்
கந்தலாகிய நோட்டில் அவளுக்கான கடிதத்தை
என் மனம் ஈர்த்த பேரழகி! என துவங்கி
பெயரெழுத முனைகையில் பெயரறியாது
இடம் விடுத்து தொடங்கியிருந்தான்...
தூக்கத்தில் எவன் தாயையையோ
வேசியென பழித்து தடாரென எழுந்தவள்
அவன் புன்னகை கண்டு முகம் சுழித்தாள்
கலைந்த கூந்தல்கட்டி முகம் நனைத்து
ஆடை களைந்து கால்விரித்து
ம் என கோபக்குரல் விடுத்து கண்மூடினாள்
உச்சந்தலையில் முத்தமிட்டு அவளின்
பிறந்த மேனியில் ஆடைமூட பால்யம் நினைத்து
அப்பாவென கதறி அழத்துவங்கினாள்
செத்துக்கிடந்த அவள் மனதுக்கு
உயிர் கொடுத்தவனை வழியனுப்பியவள்
பின்னர் கவிதாயினி ஆகியிருந்தாள்!
அறிந்தபின்னும் மனவிருப்பத்தை
கடிதமெழுத முடிவெடுத்திருந்தான்
அவனுக்கு அவள் முதலாம் அழகி என்பதாலும்
அதுவே கடைசியெனவும் தீர்மானித்து
சாளரத்தில் கூடுகட்டி வாழும் அணில்களின்
மெல்லிசைக்கு காதுகொடுத்துவிட்டு
கண்ணாடிப்பேழையிலான ஓவியமொன்றின்
நிர்வாணத்தை ரசித்துக்கொண்டிருந்தான்
பாதி தூக்கத்தில் ஒளிரும் கருவிழியை
முழுவதுமாய் ஆக்கிரமிக்கவேண்டுமென
புரளும் பக்கமெல்லாம் வந்தமர்ந்தான்
வாடிக்கையாளர்கள் கடன்சொல்லிப்போக
பெயரும் பணமும் குறிப்பெடுத்துவைக்கும்
கந்தலாகிய நோட்டில் அவளுக்கான கடிதத்தை
என் மனம் ஈர்த்த பேரழகி! என துவங்கி
பெயரெழுத முனைகையில் பெயரறியாது
இடம் விடுத்து தொடங்கியிருந்தான்...
தூக்கத்தில் எவன் தாயையையோ
வேசியென பழித்து தடாரென எழுந்தவள்
அவன் புன்னகை கண்டு முகம் சுழித்தாள்
கலைந்த கூந்தல்கட்டி முகம் நனைத்து
ஆடை களைந்து கால்விரித்து
ம் என கோபக்குரல் விடுத்து கண்மூடினாள்
உச்சந்தலையில் முத்தமிட்டு அவளின்
பிறந்த மேனியில் ஆடைமூட பால்யம் நினைத்து
அப்பாவென கதறி அழத்துவங்கினாள்
செத்துக்கிடந்த அவள் மனதுக்கு
உயிர் கொடுத்தவனை வழியனுப்பியவள்
பின்னர் கவிதாயினி ஆகியிருந்தாள்!
0 comments
Post a Comment