Pin It

Widgets



வாழ்வது பற்றியதான மனநிலை
சலனத்தில் சிக்கிக்கொள்கிறது
ஆம்புலன்ஸ் ஓசை கேட்கும்போது

பின் கதவுக்கண்ணாடிவழியே
காணக்கிடைக்கும் முகமானது
அனுமதியின்றி துக்கத்தை புகுத்துகிறது

நகரத்தின் சாலை நெரிசல்களில்
சன்னமாய் விழும் அலறல்கள்,
பாம்படம் பூட்டிய கிழவியின் ஓப்பாரியை

எவ்வித அச்சுறுத்தல்களுமின்றி
என் கால்விரல் கட்டி என்னை எனக்கே
மீண்டும் மீண்டும் அறிமுகப்படுத்துகிறது

காதல்
காமம்
பசியென
நீளும் கனவுகளைத் தாண்டி

ஒரு மரணத்தில் பூத்துவிடும்
சாலைப்பூக்கள் நெடியேற்றுகிறது
இறப்பு பற்றியதான எதார்த்தத்தை!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets