Pin It

Widgets

மதி

Thursday, January 10, 2013 | 0 comments »

சாலையெங்கும் வியாபித்துக்கிடக்கும்
நிலவின் ஒளியை
வானம் பார்த்து படுத்திருந்தாள் மதி

நாய் தன் குட்டிகளோடு இடம்பெயர
பேசுவதற்கு யாருமற்றவளாய்
மெளனத்தை துணைக்கு அழைத்திருந்தாள்

அன்றைய பொறுக்கல்களில்
உடைந்த பொம்மையோ பற்களுடைந்த சிப்போ
எந்தத் தெருவிலும் கிடைக்கவில்லை

நடுநிசியில் வெற்றிலையிடிக்கும் ஓசை
அன்றேனோ கேக்காதிருக்க
பீங்கான் தட்டு கண்ணீரால் நிறைந்திருந்தது!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets