Pin It

Widgets


நான் எப்படி நகர்ந்து படுத்தாலும்
என் தொடுவுணர்வு இன்றி மகள்
உறங்கமாட்டாள் என்றாள் அக்கா

தேர்வு விடுமுறையில் அயல்தேசம்
வசிக்கும் தகப்பனை காணும் ஆவலில்
மகளும் ஆவலாய் இருப்பதை சொல்லியவள்

மகளுக்கு மகளாக மாறியிருந்தாள்
குழந்தையாக மாறியிருந்தாள்-தன் மகள்
அப்பா பிள்ளையென புலம்பியும் வைத்தாள்

தனக்குத்தானே ஆறுதலாய் மகளின்
ஆசையையும் தகப்பனின் தவிப்பையும்
புரிந்தவளாய் அனுப்பவும் தயாராகியிருந்தாள்

பிரிவின் பொழுதுகளை இரவுகளை
மகள் அருகாமையின்றி
எப்படி கழியும் இந்த பத்து நாட்கள்?

பிள்ளையின் அன்பை
அவளின் மொழியை, பாசத்தை
சின்ன சின்னதாய் குறிப்பெடுத்து வை

பருவம் கடக்கையில்
உன்னுடனான என் பிரிவென
உன் மகளிடம் கொடு

அப்பா பிள்ளை, அன்றிலிருந்து
அம்மா பிள்ளையாகியிருப்பாள் என்றேன்
அளவாய் சிரித்து வைக்கிறாள் அக்கா!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets