Pin It

Widgets

உதவி

Thursday, January 10, 2013 | 0 comments »


புறக்கணிப்பின் காயங்கள்
இமைப்பீலிகையில் சீழ்வடிந்து
உறைந்துக்கிடப்பவனை பார்த்ததுண்டா?

சோகத்தின் பிரதிநிதியாய்
வெளியேறும் கண்ணீர்த்துளிகளை
சமபந்தி செய்திடமுடியாது எவருக்கும்

அறைக்குள் தஞ்சம் புகுதலோ
அரவற்ற இடத்தில் லயித்தலோ
எளிதில் வாய்த்துவிடுவதில்லை

உங்களின் முகசுளிப்பும்
முணுமுணுத்தலும் ஒருவனின்
வெளிப்படுத்துதலை கட்டுப்படுத்துகிறது

அழவேண்டிடும் நேரத்தில்
இடமற்று அலையும் தனியொருவனின்
மனநிலையை சந்தித்தவரா நீங்கள்?

ஆம் எனில்
கருணையின் அடிப்படையில்
தற்கொலைக்காவது உதவுங்கள்...

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets