அழுவதற்கான காரணமேதுமின்றி
அழுவதற்கு ஆயத்தமாகிறது
கைவிடப்பட்ட மனது
இசைக்கும், ஆறுதல் குரலுக்கும்
செவிகொடுக்காத மனதோடு
வாழ்வதற்கு சிரமமாய் இருக்கிறது
பேரிறைச்சலோ அதீத அமைதியோ
எதையும் ஏற்பதாய் இல்லை
எந்தப் பொழுதிலும் எந்த நிலையிலும்
ஒரு தற்கொலை கனவைக்கூட
சாதகமாக்கத் தெரியாதாவென
ஏளனமாய் சிரிக்கிறது பின்பு அழுகிறது
மூடிய விழியோ விட்டம் பார்க்கும் விழியோ
சாதகமாய் இல்லை... எதையாவது
முன்னிறுத்திக்கொண்டேயிருக் கிறது
தற்காலிகமாய்
காயமொன்றினை பரிசளியுங்கள்-அது
உடலளவில் இருக்கட்டும்!
அழுவதற்கு ஆயத்தமாகிறது
கைவிடப்பட்ட மனது
இசைக்கும், ஆறுதல் குரலுக்கும்
செவிகொடுக்காத மனதோடு
வாழ்வதற்கு சிரமமாய் இருக்கிறது
பேரிறைச்சலோ அதீத அமைதியோ
எதையும் ஏற்பதாய் இல்லை
எந்தப் பொழுதிலும் எந்த நிலையிலும்
ஒரு தற்கொலை கனவைக்கூட
சாதகமாக்கத் தெரியாதாவென
ஏளனமாய் சிரிக்கிறது பின்பு அழுகிறது
மூடிய விழியோ விட்டம் பார்க்கும் விழியோ
சாதகமாய் இல்லை... எதையாவது
முன்னிறுத்திக்கொண்டேயிருக்
தற்காலிகமாய்
காயமொன்றினை பரிசளியுங்கள்-அது
உடலளவில் இருக்கட்டும்!
0 comments
Post a Comment