Pin It

Widgets

நீங்கள்

Thursday, January 10, 2013 | 0 comments »

ஒப்புக்கொடுப்பதன் நிமித்தமாய்
உங்கள் தவறுகளை மன்னிக்க
எல்லா இரவிலும் மன்றாடுகிறீர்கள்

பிராயச்சித்தம் தேடுவதற்காய்
புண்ணியம் செய்வதென
எல்லோரிடத்திலும் அன்பு செய்கிறீர்கள்

ஒரு வழிப்போக்கனின் பசியறிந்து
உணவிற்கான பணம்கொடுத்து
புண்ணியக்கணக்கை எண்ணுகிறீர்கள்

ஆலயம் கடந்து போகையில்
உங்கள் கடவுளின் குறியீடுகளை
காற்றில் வரைந்து கொள்கிறீர்கள்

சாலையின் நடுவே கழிவுகளை அள்ளி
வெளியேறுபவனைக்கண்டு
முகம் சுளிக்கிறீர்கள்...

உங்களுக்கு துர்நாற்றமாகவும்
அவனுக்கு கடவுளின் எச்சமெனவும்
தோன்றக்கூடமென எண்ணுகிறீர்களா?

உங்களுக்குத்தெரியுமா
அவரவர் பசிதீர்க்கும்
காமத்தின் எச்சம் தான் நீங்கள்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets