Pin It

Widgets


அழுவதற்கு ஆயத்தமாய்
தானுமற்ற இடமொன்றைத் தேடி
இருளில் மூழ்குவதென முடிவெடுத்தவன்

சன்னல்களற்ற அறை
காற்றுபுகமுடியாதொரு அடைப்பு
இடுக்குகளில்லா கதவினை கண்டான்

கண்ணீரின் பிசுபிசுப்பினை துடைக்க
அப்பா உடுத்திய லுங்கியொன்றோடு
தாழிடப்பட்டது அறை

அழுவதற்கான காரணங்கள் யாவும்
யாருக்கென யாரலென குமைந்து
மூச்சினை அடைத்திருந்தது சிந்தனை

நிசப்தங்கள் ஆழும் அந்த அறையும்
அதன் சூழலும் கதறல்களை
கவனமாய் உள்வாங்கிக்கொண்டிருந்தன

அவனோ
தன்னைத் தேடுவதற்கு கூட
யாருமில்லையென மீண்டும் அழத்துவங்கினான்

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets