Pin It

Widgets



இறக்கைக்கு ஓய்வேதும் விரும்பாது
செவிவழியே பறந்துகொண்டிருந்தது
துருப்புச்சீட்டு ஏந்திய பறவையொன்று

யோசித்தலையும் புரிதலையும்
யோசிக்க மறந்திருந்திருந்த பொழுதொன்றில்
அது வாய்வழியே பிறந்திருந்திருந்தது

எதிர் கேள்வி எழுப்பாதவர்களை
நன்கு அறிந்திருந்தது அப்பறவை
அவர்களும் தலையாட்டிக்கொண்டிருந்தனர்

நலன் விரும்பியோ உண்மை அறிந்தவனோ
நியாயத்தின் பக்கம் நிற்பவனோ
எவரும் வாய்க்காத தருணத்தில்

பழிக்கப்பட்டவன் இறந்திருந்தான்
துரோகம் செய்தவன்
துக்கம் விசாரித்துக்கொண்டிருந்தான்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets