இறக்கைக்கு ஓய்வேதும் விரும்பாது
செவிவழியே பறந்துகொண்டிருந்தது
துருப்புச்சீட்டு ஏந்திய பறவையொன்று
யோசித்தலையும் புரிதலையும்
யோசிக்க மறந்திருந்திருந்த பொழுதொன்றில்
அது வாய்வழியே பிறந்திருந்திருந்தது
எதிர் கேள்வி எழுப்பாதவர்களை
நன்கு அறிந்திருந்தது அப்பறவை
அவர்களும் தலையாட்டிக்கொண்டிருந்தனர்
நலன் விரும்பியோ உண்மை அறிந்தவனோ
நியாயத்தின் பக்கம் நிற்பவனோ
எவரும் வாய்க்காத தருணத்தில்
பழிக்கப்பட்டவன் இறந்திருந்தான்
துரோகம் செய்தவன்
துக்கம் விசாரித்துக்கொண்டிருந்தான் !
செவிவழியே பறந்துகொண்டிருந்தது
துருப்புச்சீட்டு ஏந்திய பறவையொன்று
யோசித்தலையும் புரிதலையும்
யோசிக்க மறந்திருந்திருந்த பொழுதொன்றில்
அது வாய்வழியே பிறந்திருந்திருந்தது
எதிர் கேள்வி எழுப்பாதவர்களை
நன்கு அறிந்திருந்தது அப்பறவை
அவர்களும் தலையாட்டிக்கொண்டிருந்தனர்
நலன் விரும்பியோ உண்மை அறிந்தவனோ
நியாயத்தின் பக்கம் நிற்பவனோ
எவரும் வாய்க்காத தருணத்தில்
பழிக்கப்பட்டவன் இறந்திருந்தான்
துரோகம் செய்தவன்
துக்கம் விசாரித்துக்கொண்டிருந்தான்
0 comments
Post a Comment