Pin It

Widgets


உன் ஞாபகத்துகள்கள்
நம்மைப்பற்றிய எண்ணத்தை குவிக்க
என்னை எனக்கு மறைக்கிறது

பிடிவாதங்களில் எழுந்த
மெளன அடுக்குகள் உரமாகி உருமாறி,
சந்தேக பிம்பத்தை உடைய விடுதாயில்லை

நம்பிக்கையில் துளிர்விடும்
புன்னகை வாய்க்காத பொழுதொன்றில்
பெருக்கெடுக்கிறது கண்ணீர் நதி

உருண்டோடும் துளிகளெல்லாம்
ஒன்றாகி மெளனமெனும் புற்றுகட்ட
குடியேறுகிறது புறக்கணிப்பெனும் சர்ப்பம்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets