தினமும் ஒரு பெயரைச் சொல்லி
அதற்கு கிழமையென்று பெயரிட்டு
யாரையாவது பயமுறுத்துகிறீர்கள்
நிமிடமென்றும் நொடியென்றும்
நாழிகையென்றும் வகுத்து
யாரையாவது உதாசினப்படுத்துகிறீர்கள்
உங்கள் கொள்கையை மனநம்பிக்கையை
அடுத்தவனிடம் கூறி
அவனையும் சஞ்சலப்பட வைக்கிறீர்கள்
ஏதுமற்று வாழ்ந்த நாட்களைத்தின்று
செறிக்காது போன நாகரீகம் விழுங்கி
நான் நீ என தன் சுயமிழந்து சுயம் அறியாது
கருணையை கொன்று கள்ளமில்லா
மனதைக்கொன்று புகழ்பாடி
புகழ் விரும்பி வஞ்சத்தோடு வாழும் நீங்கள்
சிறியவன் என்றும் வாலிபன் என்றும்
வயோதிகன் என்றும் காலத்தை காரணியாக்கி
நன்றாகவே நடித்துக்கொண்டிருக்கிறீர்க ள்!
அல்லது
யாருமறியாது ஏமாற்றுகிறேன் என
ஏமாந்து கொண்டிருக்கிறீர்கள்...
அதற்கு கிழமையென்று பெயரிட்டு
யாரையாவது பயமுறுத்துகிறீர்கள்
நிமிடமென்றும் நொடியென்றும்
நாழிகையென்றும் வகுத்து
யாரையாவது உதாசினப்படுத்துகிறீர்கள்
உங்கள் கொள்கையை மனநம்பிக்கையை
அடுத்தவனிடம் கூறி
அவனையும் சஞ்சலப்பட வைக்கிறீர்கள்
ஏதுமற்று வாழ்ந்த நாட்களைத்தின்று
செறிக்காது போன நாகரீகம் விழுங்கி
நான் நீ என தன் சுயமிழந்து சுயம் அறியாது
கருணையை கொன்று கள்ளமில்லா
மனதைக்கொன்று புகழ்பாடி
புகழ் விரும்பி வஞ்சத்தோடு வாழும் நீங்கள்
சிறியவன் என்றும் வாலிபன் என்றும்
வயோதிகன் என்றும் காலத்தை காரணியாக்கி
நன்றாகவே நடித்துக்கொண்டிருக்கிறீர்க
அல்லது
யாருமறியாது ஏமாற்றுகிறேன் என
ஏமாந்து கொண்டிருக்கிறீர்கள்...
0 comments
Post a Comment