Pin It

Widgets



எல்லா பாதையிலும் எவனோ ஒருவன்
கை நீட்டி பேசிக்கொண்டிருக்கிறான்
ஒருவன் வழிமறித்து கேட்கிறான்

சுட்டிக்காட்டுவதாகட்டும் கேள்வியாகட்டும்
பிழையாகட்டும் விமர்சனமாகட்டும்
எளிதில் யோசிக்கவைத்துவிடுகிறார்கள்

அவசர நடையோ சிந்தனைமுகமோ
கேட்பதென தீர்மானித்தபின் அவர்களின்
கேள்விகள் கேட்கப்படாமலிருப்பதில்லை

கேட்பவர் யாரென அறியாதிருந்தும்
கேட்பது இன்னதென அறியாதிருந்தும்
பதிலோ புன்னகையோ பிறந்துவிடுகின்றன

தப்பித்தலுக்காக நாம் இடைச்செருகும்
பதிலோ புன்னகையோ ஒப்புக்கானதென
அவர்களும் அறியாமலில்லை!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets