Pin It

Widgets


ஆற்றில் துணி துவைத்து
பிழைப்பு நடத்தும் கிழவி ஒருத்தி
தன் மகள் வயிற்று மகளுக்கு
துண்டு ஒன்றில் நீர் அரித்து
மீன் பிடிக்க கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தாள்

கல்லில் விழும் ஒவ்வொறு அடிக்கும்
உள் வாங்கிச் செல்லும்
மூச்சுக் காற்றின் ஓசை
தனிமையை நிருபித்துக் கொண்டிருந்தது

ஓரமாய் மேய்ந்து கொண்டிருந்த
ஜோடிக்கழுதைகள் ஒரு சேர சத்தமிட
கொக்கு கூட்டம் இறக்கையடித்து
திசை நோக்கி கலைந்து சென்றது

புல் தரையில் ஒரு கைப்பிடி
பிழிந்து வைத்த பழைய சோற்றினை
சமீபமாய் சேர்ந்துகொண்ட
நாய் ஒன்று தின்னத்துவங்கியது

உலர்ந்த துணிகளெல்லாம்
மூட்டையாகி கழுதைக்கு சுமையாகிப்போக
சிறுமியிடம் தப்பிய மீன்கள்
நீர் வற்றி இறக்கத்துவங்கின...

மழையும் நீரும் ஆறும்
காலமும் கழுதையும்
கொக்குகளும் குருவிகளும்
பாட்டியும் அங்ஙனமே!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets