Pin It

Widgets

இரண்டு பாகங்களாய் கொண்ட கதவில்
கீழ்கதவு தாழிடப்படும் வேளையிலெல்லாம்
வந்தமர்ந்து கொள்ளும் பூனை

பூனைமுடி ஆடையில் ஒட்டிக்கொள்ளும்,
வாய்க்குள் சென்றுவிடுமென அம்மா
எப்போதும் எச்சரித்துக்கொண்டிருப்பாள்

அதற்கொரு பால்படிந்த கிண்ணம்
காய்ந்த பருக்கை அடுக்களை நிலையை
தாங்கியபடி வைத்திருப்பாள்

ஓடுகள் போர்த்திய சட்டத்தில்
எலிகளின் கூச்சல்கள் எழும் வேளையில்
பூனையை தேடியபடி திட்டிக்கொள்வாள்

இரத்தம் படிந்த கரையோடு
ஈன்ற குட்டிகளை இடம் கடத்துகையில்
முகம் காணாத அப்பாவிற்கு கண்ணீர் சிந்தினாள்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets