இரவுகளால் சபிக்கப்படும் வேளையில்
கடல் சிந்தும் உப்புக்காற்றிலிருப்பது
ஆசிர்வதிப்பது போலிருக்கிறது என்னை
அலைகள் எழுப்பும் சாரல்களில்
நினைவுகளால் முளைத்த தேகக்கொப்பளிப்புகளை
மிருதுவாக்க ஈரமணல் பதிக்கிறேன்
சிறுமி ஒருத்தி சிந்தும் பருக்கைகள் போல
தேடல்களும் தொலைத்தவைகளும்
என்னை சுற்றி ஆக்கிரமித்துகொண்டிருக்க
வேண்டாத கோயிலில்லை
பார்க்காத மருத்துவமில்லை
என்றோரு குரல் காது கடக்கையில்
அறையின் தரையெங்கும்
பரவிக்கிடக்கும் முதுகு ரேகைகள்
தனிமையின் ஆயுளை நீட்டுகின்றன!
கடல் சிந்தும் உப்புக்காற்றிலிருப்பது
ஆசிர்வதிப்பது போலிருக்கிறது என்னை
அலைகள் எழுப்பும் சாரல்களில்
நினைவுகளால் முளைத்த தேகக்கொப்பளிப்புகளை
மிருதுவாக்க ஈரமணல் பதிக்கிறேன்
சிறுமி ஒருத்தி சிந்தும் பருக்கைகள் போல
தேடல்களும் தொலைத்தவைகளும்
என்னை சுற்றி ஆக்கிரமித்துகொண்டிருக்க
வேண்டாத கோயிலில்லை
பார்க்காத மருத்துவமில்லை
என்றோரு குரல் காது கடக்கையில்
அறையின் தரையெங்கும்
பரவிக்கிடக்கும் முதுகு ரேகைகள்
தனிமையின் ஆயுளை நீட்டுகின்றன!
0 comments
Post a Comment