Pin It

Widgets

இரவுகளால் சபிக்கப்படும் வேளையில்
கடல் சிந்தும் உப்புக்காற்றிலிருப்பது
ஆசிர்வதிப்பது போலிருக்கிறது என்னை

அலைகள் எழுப்பும் சாரல்களில்
நினைவுகளால் முளைத்த தேகக்கொப்பளிப்புகளை
மிருதுவாக்க ஈரமணல் பதிக்கிறேன்

சிறுமி ஒருத்தி சிந்தும் பருக்கைகள் போல
தேடல்களும் தொலைத்தவைகளும்
என்னை சுற்றி ஆக்கிரமித்துகொண்டிருக்க

வேண்டாத கோயிலில்லை
பார்க்காத மருத்துவமில்லை
என்றோரு குரல் காது கடக்கையில்

அறையின் தரையெங்கும்
பரவிக்கிடக்கும் முதுகு ரேகைகள்
தனிமையின் ஆயுளை நீட்டுகின்றன!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets