Pin It

Widgets

யூகம்

Friday, February 08, 2013 | 0 comments »

மீண்டும் ஒருமுறை சொல்லச்சொல்லி
கேட்டுக்கொண்டிருந்தாய்
வெகுநேரமாய்

குழந்தையின் அடம்பிடிப்பினை
நச்சரிப்பென நினைக்காத தாயாய்
நீயுமாகி நானுமாகியிருந்தேன்

சொல்லை அதன் உச்சரிப்பை
உதட்டு விரிப்பிலிருந்தும் கண்களிலும்
தீவிரமாய் கவனித்துக்கொண்டிருந்தாய்

உண்மை தப்பவிடும் எச்சில் விழுங்களில்
கோபித்திருப்பாயா மறைத்திருப்பாயா
என்ற மனநிலை அவ்விரவை வதைக்க

பின்னிரவின் அழைப்பில் தூக்கமில்லையென்றாய்
கேள்வி உனதல்லாதிருந்திருக்கலாம்
எனதில்லா பதிலைப்போல!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets