Pin It

Widgets

பாட்டி

Friday, February 08, 2013 | 0 comments »

ஊர்த்திருவிழாவில்
பொங்க வைக்கும் போதும்

சமஞ்ச வீட்டில்
தண்ணீர் ஊற்றும் போதும்

இழவு வீட்டில்
ஒப்பாரி வைக்கும் போதும்

சன்னமாய் ஒலிக்கும்
அந்தக் குரல் எல்லா இடத்திலும்

கொலவ சத்தமாய் இருக்கட்டும்
ஒப்பாரியாய் இருக்கட்டும்

அந்த ஏரியாவில் பெயர் போனவள்
தெய்வபழம் பாட்டி

சமீபமாய்
கீழத்தெருவும் இணைந்து கொண்டது

அது

தெய்வபழம் மாடு முட்டி செத்தது
இந்தத்தெருவில் தானே என்பது!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets