Pin It

Widgets

ஆறுதலாய்...

Friday, February 08, 2013 | 0 comments »


பைத்தியக்காரத்தனமாய்
இருக்கிறதென கோபம் கொள்கிறாள்
அவளைப்பார்கையில் எழும் புன்னகையை

தூரத்தில் என்னைக் கண்டதும்
சைகை செய்கிறாள் சிரிக்காதேவென
அதட்டலுமாய் கெஞ்சலுமாய்

ஒரு புன்னகையை நிராகரிப்பவளிடம்
நமக்கென்ன உறவென
முன் தயாரிப்போடு நெருங்குகையில்

தன் தகப்பனின் சாயலிருப்பதாய்
அழுபவளைக் கண்டு மெளனித்திருப்பதே
ஆறுதலாய் இருக்கிறது எனக்கும்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets