Pin It

Widgets

இப்படிக்கு

Friday, February 08, 2013 | 0 comments »

முடிச்சுகளோடு துவங்கி
அவிழ்த்திட்ட முந்தானையில்
உன் மகள் துயில்கிறாள்

நீ ஒரு பக்கம்
நான் ஒரு பக்கம்
இருப்பிலும் இருத்தலிலும்

உன் குரலெங்கும்
வியாபித்துக்கிடக்கும்
சம்பிரதாய கடமைகள்

உன் முகம் தேடியழும்
மகளின் முகம் கண்டு
மனம் பொறுமை கொள்கிறது

சுதந்திரமென்பதை
நீ உனக்கும் நான் எனக்கும்
எடுத்துக்கொள்ளச் சொன்னதில்

நமக்கான சுதந்திரம்
மரித்துப்போனதை நீ
அறியாது போனதை அறிவேன்

தேவை இன்னதென கேட்டும்
தேவை என்னதென கேட்டும்
சலித்திட்டன பொழுதுகள்

உன்னை மீட்டெடுப்பதிலும்
இழந்து போன சுயத்தையும்
என்னை உன்னிலிருந்து

மீட்டெடுப்பாயென
காத்திருந்து தோற்றுப்போனேன்
வருட விடுமுறை வருகையிலும்

விதைத்தவன் நீ எனினும்
வளர்த்தவள் நான்
பயிரோடு வெளியேருவேன்

என்றாவது ஒருநாள்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets