என் வழியெங்கும்
என்னோடு பயணித்துக்கொண்டிருக்கிறது
நானின்றி எனக்குள் வாழும் நான்...
மரணம் தப்பிய விபத்தொன்றில்
கால்கள் இழுத்தோடும் நாய்குரல்போல
பரிதாபமாய் இருக்கிறது அக்குரல்
ஒரு விலைமாதுவுக்கு சுரக்கும்
காதல் சுனையை பகிர ஆளின்றி
நீர்த்துப்போகும் கண்ணீர்த்துளிகள் போல
நானின்றி வாழும் என்னை கொல்வதற்கோ
எனக்குச்சாதகமாய் வாழ வைப்பதற்கோ
வழியின்றி தவித்திருக்கிறேன் தனித்திருக்கிறேன்
மெளனமாய் அழவும் உங்களோடு சிரிக்கவும்
கற்றுக்கொடுத்த காலத்தின் குளத்தில்
நீர் தப்பிய மீனாய் வாழ்கிறேன் நான்
ஆறுதல் சொல்ல யாரும் எத்தனிக்காதிர்கள்
எனக்கோ அழ வேண்டும் போலிருக்கிறது
சத்தமாய் சத்தமாய் சத்தமாய்!
என்னோடு பயணித்துக்கொண்டிருக்கிறது
நானின்றி எனக்குள் வாழும் நான்...
மரணம் தப்பிய விபத்தொன்றில்
கால்கள் இழுத்தோடும் நாய்குரல்போல
பரிதாபமாய் இருக்கிறது அக்குரல்
ஒரு விலைமாதுவுக்கு சுரக்கும்
காதல் சுனையை பகிர ஆளின்றி
நீர்த்துப்போகும் கண்ணீர்த்துளிகள் போல
நானின்றி வாழும் என்னை கொல்வதற்கோ
எனக்குச்சாதகமாய் வாழ வைப்பதற்கோ
வழியின்றி தவித்திருக்கிறேன் தனித்திருக்கிறேன்
மெளனமாய் அழவும் உங்களோடு சிரிக்கவும்
கற்றுக்கொடுத்த காலத்தின் குளத்தில்
நீர் தப்பிய மீனாய் வாழ்கிறேன் நான்
ஆறுதல் சொல்ல யாரும் எத்தனிக்காதிர்கள்
எனக்கோ அழ வேண்டும் போலிருக்கிறது
சத்தமாய் சத்தமாய் சத்தமாய்!
0 comments
Post a Comment