Pin It

Widgets


தன் நலன்மீது யாருக்கேனும்
அக்கரை இருக்குமென மனது
ஓயாமல் பிதற்றிக்கொண்டிருக்கிறது

தான் நேசிப்பவர்களும்
தன்னை நேசிப்பவர்களும் மறப்பதற்கு
முயன்றிட முயன்றிட விம்முகிறது

அழுதிட துடித்திடும் தருணத்தில்
முதியவரின் கையூசி தையல் போல
நடுக்கத்தோடு நகருகிறது பொழுது

தீர்க்கமாய் இதுவே முடிவென
துணிகையில் யாரோ ஒருவரின்
நலம் விசாரிப்பில் திடிர் அழைப்பில்

போலியாய் உதிர்க்கும் புன்னகையாலும்
பொய்களில் நீளும் நிமிடங்களிலும்
தள்ளிப்போகிறது ஒரு தற்கொலை கனவு!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets