Pin It

Widgets

புளியம்பூக்கள்
நிறைந்து கிடக்கும் தோப்பில்
கிழவியும் குமரியும் சிறுமியும்

எப்போதும் சாடைபோட்டு
திட்டிக்கொண்டிருக்கும் பாட்டி
கோபத்தை காட்டுவதற்கு
ஒரு காரணியாக பூக்கள்

வெயில் தின்ற மரத்தின்
நிழல்படரும் இடமெங்கும்
கால் பதிக்கும் குமரிக்கு
இதழ்பட்டு பிரியும் பூக்கள்

மணல்வீடும் அடுப்பும்
தயாரகிவிட
குழம்பிற்கும் பூஜைக்கும்
சிறுமி கையேறுகிறது பூக்கள்

பூ குப்பையாகப் படுகிறது
பூ ரசனையாகப் படுகிறது
பூ பூவாகிறது!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets