Pin It

Widgets


உன் அருகாமையற்ற
பொழுதுகளில் விழியெங்கும்
மணலாய் வியர்த்துக் கிடக்கிறது

இழவு வீட்டில் எழும் ஓலங்களை
குறிப்பெடுத்தது போல
நாய்கள் குரைக்கும் நள்ளிரவில்

விசும்பி அழுவது போன்ற ஓசை
அழுகிறாயா என்பது தெரியாது
அழுவது போன்று கேட்கிறது

நீயில்லா உனக்கான இரவுகளில்
கள்ளிச்செடியில் படரும் கொடிபோல
அனுமதியின்றி நுழையும் நினைவுகளோடு

பால்படிந்த வெற்றுக்கிண்ணத்தை
பூனை நக்குவதுபோல
ஏங்கித் தவிக்கிறேன் நான்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets