உன் அருகாமையற்ற
பொழுதுகளில் விழியெங்கும்
மணலாய் வியர்த்துக் கிடக்கிறது
இழவு வீட்டில் எழும் ஓலங்களை
குறிப்பெடுத்தது போல
நாய்கள் குரைக்கும் நள்ளிரவில்
விசும்பி அழுவது போன்ற ஓசை
அழுகிறாயா என்பது தெரியாது
அழுவது போன்று கேட்கிறது
நீயில்லா உனக்கான இரவுகளில்
கள்ளிச்செடியில் படரும் கொடிபோல
அனுமதியின்றி நுழையும் நினைவுகளோடு
பால்படிந்த வெற்றுக்கிண்ணத்தை
பூனை நக்குவதுபோல
ஏங்கித் தவிக்கிறேன் நான்!
பொழுதுகளில் விழியெங்கும்
மணலாய் வியர்த்துக் கிடக்கிறது
இழவு வீட்டில் எழும் ஓலங்களை
குறிப்பெடுத்தது போல
நாய்கள் குரைக்கும் நள்ளிரவில்
விசும்பி அழுவது போன்ற ஓசை
அழுகிறாயா என்பது தெரியாது
அழுவது போன்று கேட்கிறது
நீயில்லா உனக்கான இரவுகளில்
கள்ளிச்செடியில் படரும் கொடிபோல
அனுமதியின்றி நுழையும் நினைவுகளோடு
பால்படிந்த வெற்றுக்கிண்ணத்தை
பூனை நக்குவதுபோல
ஏங்கித் தவிக்கிறேன் நான்!
0 comments
Post a Comment