Pin It

Widgets

மனது

Friday, February 08, 2013 | 0 comments »


வெயில் மங்கிய பொழுதில்
அச்சத்தையும் நடுக்கத்தையும்
தேகமெங்கும் தெளிக்கிறது

பயணப்படாத பாதையில்
எழுதப்படாத வரிகளோடு
தொலைந்துவிட வேண்டுகிறது

உலர்ந்து வெடிக்கும்
உதட்டுக் குருதியை
உணவாய் கொடுக்கத் துணிகிறது

உருவமில்லாது ஏறும்
மன எடையும் தலைச்சுமையும்
நகக்கண்களை பியித்தெறியத் தூண்டுகிறது

தேகமெங்கும் கொழுவிக்கிடக்கும்
சிந்தனை முட்களைக் கண்டு
பயந்து அலறுகிறது மனது

ஒலியற்ற மொழியற்ற இடமொன்றில்
இளைப்பாறிவிட்டு வருகிறேன்
சற்று பயமாய் இருக்கிறது!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets