Pin It

Widgets


பசித்தலையும் யாசகனின்
பார்வையை ஒத்திருக்கிறது
காலத்தின் கண்கள்

என்னைத்தின்று
என் சுயம்தின்று
நினைவுதின்று

பசியடங்காது
மணிக்கட்டிலறுத்து குருதியோ
தூக்கிலிட்டு உடலையோ தாவென

இரவு நேரத்தில் இறைஞ்சுகிறது
எனக்கு
பார்ப்பதற்கு பாவமாயிருக்கிறது!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets