கடைசியாய்
கலயம் உடைக்கும் சத்தமும்
நீள் பெருமூச்சும், கட்டுப்படுத்திய
அழுகை சத்தமும் கேட்டது
தேடிய தனிமை கிட்டியதாய்
உதிர்த்த ஆனந்த கண்ணீரினால்
புற்களும், யாரோ நட்டுவைத்த
கற்றாழையொன்றும் முளை விட்டது
பாம்பு ஊரும் சத்தமும்
மணல் கிண்டும்
பறவைகளின் கால்கள் சத்தமும்
உரையாடலுக்கு இடையூறு
அமைதி வேண்டி
கடவுளிடம் மன்றாடினேன்
பொறுத்திருக்கச் சொன்னான்
சாத்தானிடம் மன்றாடினேன்
வா
உலகம் அழித்துவிடலாமென்றான்
யோசித்துக் கொண்டிருக்கிறேன்
என் கல்லறையின் மீது விளையாடும்
மழலை மொழி கேட்டபடி!
கலயம் உடைக்கும் சத்தமும்
நீள் பெருமூச்சும், கட்டுப்படுத்திய
அழுகை சத்தமும் கேட்டது
தேடிய தனிமை கிட்டியதாய்
உதிர்த்த ஆனந்த கண்ணீரினால்
புற்களும், யாரோ நட்டுவைத்த
கற்றாழையொன்றும் முளை விட்டது
பாம்பு ஊரும் சத்தமும்
மணல் கிண்டும்
பறவைகளின் கால்கள் சத்தமும்
உரையாடலுக்கு இடையூறு
அமைதி வேண்டி
கடவுளிடம் மன்றாடினேன்
பொறுத்திருக்கச் சொன்னான்
சாத்தானிடம் மன்றாடினேன்
வா
உலகம் அழித்துவிடலாமென்றான்
யோசித்துக் கொண்டிருக்கிறேன்
என் கல்லறையின் மீது விளையாடும்
மழலை மொழி கேட்டபடி!
0 comments
Post a Comment