Pin It

Widgets

உள்ளங்கையில் மத்தெனும்
முழங்கையால் பருப்பு கடைந்து
சோறூட்டி

கைவிரல் நகங்களுக்கு
சாயம் பூசிவிடும்
ஒரு மாலையில்

பாதத்தில் விரல்களால்
நடந்து நடந்து
நண்டூருது நரியூருது விளையாட

சாடை செய்வாள்
கால்கள் இரண்டையும்
என் மடியில் கிடத்தியபடி!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets