Pin It

Widgets

வானின் கூரையில் ஒழுகுதல் நில்லாது
கூட்டுப் பறவைகள் இறக்கை சத்தம் தீராது
நதியின் சலசலப்பு வற்றாது

எக்கணமும் பச்சையுடுத்தி
மூலிகை நறுமணம் தெளித்து
கதிர்களுக்காக காத்திருக்கும் குளமும்

கிழத்தி அள்ளி முடியும்
கொண்டை ஊசி வளைவு தாங்கி
மலரில் மலரும் பனித்துளி பரப்பி

பருவப்பெண்ணின் அகன்ற தோளில்
அவிழ்ந்த கூந்தல் போல
வனமெங்கும் இயற்கை எழிலாட

சருகுகள் சூழ்ந்த
இரயில் நிலையத்திலிருந்து

மாதவிடாய் காலத்து
உதிரப்போக்கின் வலி தாளாது
ஓர் அலறல் சத்தம்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets