வானின் கூரையில் ஒழுகுதல் நில்லாது
கூட்டுப் பறவைகள் இறக்கை சத்தம் தீராது
நதியின் சலசலப்பு வற்றாது
எக்கணமும் பச்சையுடுத்தி
மூலிகை நறுமணம் தெளித்து
கதிர்களுக்காக காத்திருக்கும் குளமும்
கிழத்தி அள்ளி முடியும்
கொண்டை ஊசி வளைவு தாங்கி
மலரில் மலரும் பனித்துளி பரப்பி
பருவப்பெண்ணின் அகன்ற தோளில்
அவிழ்ந்த கூந்தல் போல
வனமெங்கும் இயற்கை எழிலாட
சருகுகள் சூழ்ந்த
இரயில் நிலையத்திலிருந்து
மாதவிடாய் காலத்து
உதிரப்போக்கின் வலி தாளாது
ஓர் அலறல் சத்தம்!
கூட்டுப் பறவைகள் இறக்கை சத்தம் தீராது
நதியின் சலசலப்பு வற்றாது
எக்கணமும் பச்சையுடுத்தி
மூலிகை நறுமணம் தெளித்து
கதிர்களுக்காக காத்திருக்கும் குளமும்
கிழத்தி அள்ளி முடியும்
கொண்டை ஊசி வளைவு தாங்கி
மலரில் மலரும் பனித்துளி பரப்பி
பருவப்பெண்ணின் அகன்ற தோளில்
அவிழ்ந்த கூந்தல் போல
வனமெங்கும் இயற்கை எழிலாட
சருகுகள் சூழ்ந்த
இரயில் நிலையத்திலிருந்து
மாதவிடாய் காலத்து
உதிரப்போக்கின் வலி தாளாது
ஓர் அலறல் சத்தம்!
0 comments
Post a Comment