Pin It

Widgets

சந்தன பொட்டிட்டு
கூர் பார்வை தீட்டி
கிளி கூண்டு போல கம்மலிட்டு

காதோரம் சுருண்டமுடி
சலசலக்கும் கொலுசு சூடி

மேகத்தின் நிற சேலையுடுத்தி
வானின் நிற பூக்கள் தூவி
முகமெங்கும் புன்னகை நிரப்பி

அலைபேசியில் எழும் ஒளியில்
தன் முகம் காட்டி செல்கிறாள்
மாலையில் ஒரு யுவதி!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets