Pin It

Widgets

அவளை தேற்ற நினைப்பதென்பது
பழக்கமில்லா குழந்தையை
கையிலெடுக்க முனைவது போன்றது

நகரும் முள்ளிற்காக
கடிகாரம் பார்த்துக் கொண்டிருக்கும்
பச்சிளம் போல காத்திருக்க வேண்டும்

பட்டுத்தெறிக்கும் மழைத்துளியென
விருட்டென ஒட்டிக்கொள்வாள்
தோள் பற்றிக் கொள்வாள்

காத்திருக்க வேண்டும்
காதலோடிருக்க வேண்டும்
காமமற்றிருக்க வேண்டும்

கற்றாழையிலிருந்து வடியும்
கசப்பற்ற மழை நீர் போன்றதுதான்
அற்ப்ப நிமிட கோபமும்

திண்ணையில் அமர்ந்திருக்கும்
பூனை போன்றவள்
காலுக்குள் உழல்வதில் பிரியமவளுக்கு

முரண்டு பிடிப்பாள்
அழுது தீர்ப்பாள்
ஆறுதல் தேடுவாள்

மார்பின் இளம் சூட்டிலோ
அக்குள் விரியும் கையிலோ
தலை சாய்ப்பவளுக்கு அன்பினை குழைத்து

தூங்கும் வரை அவளை
துயில விட்டால் போதும்
அந்த மூன்று நாட்களில்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets