பின்னெப்பொழுதாவது
முத்தமிட தோன்றுமாயின்
பெருவிரலால் கன்னம் தடவிக் கொடு
வறண்டு போன
இரு உதட்டினையும்
காமம் அற்று உற்று நோக்கு
நீ உடைத்து விட்ட
பருவின் தழும்பு கண்டு
மென் புன்னகை செய்
இமை பீலிகை
உதிரும் அளவிற்கு
கண்களை கூர்ந்து பார்
அடிக்கடி காதில் சொல்வதை
சலனமேதுமின்றி
உச்சாடனம் செய்
பின்பு
புகைப்படத்தினை
கவிழ்த்து விட்டு தூங்க செல்!
முத்தமிட தோன்றுமாயின்
பெருவிரலால் கன்னம் தடவிக் கொடு
வறண்டு போன
இரு உதட்டினையும்
காமம் அற்று உற்று நோக்கு
நீ உடைத்து விட்ட
பருவின் தழும்பு கண்டு
மென் புன்னகை செய்
இமை பீலிகை
உதிரும் அளவிற்கு
கண்களை கூர்ந்து பார்
அடிக்கடி காதில் சொல்வதை
சலனமேதுமின்றி
உச்சாடனம் செய்
பின்பு
புகைப்படத்தினை
கவிழ்த்து விட்டு தூங்க செல்!
0 comments
Post a Comment