Pin It

Widgets

பின்னெப்பொழுதாவது
முத்தமிட தோன்றுமாயின்
பெருவிரலால் கன்னம் தடவிக் கொடு

வறண்டு போன
இரு உதட்டினையும்
காமம் அற்று உற்று நோக்கு

நீ உடைத்து விட்ட
பருவின் தழும்பு கண்டு
மென் புன்னகை செய்

இமை பீலிகை
உதிரும் அளவிற்கு
கண்களை கூர்ந்து பார்

அடிக்கடி காதில் சொல்வதை
சலனமேதுமின்றி
உச்சாடனம் செய்

பின்பு
புகைப்படத்தினை
கவிழ்த்து விட்டு தூங்க செல்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets