Pin It

Widgets

இரயிலின் தடதடவென
காது அதிரும் சத்தம் தவிர்த்து
கீறிச்சிடும் ஓசை கண்முன்னிறுத்துவது

மிஞ்சிய பூவூடன் கூன்கிழவி
காற்று வாங்கும் இரயில் இருக்கைகள்
அவரவர் கூடு போகும் காதலர்கள்

எல்லா இரவுகளிலும்
வாசிக்கத் துவங்குவதும் அவனறியாது
அவனுள்ளிருந்து கடந்து போவதும்

வேலியோற ஓணான் கன்னியில்
தலைவிட்டு தலையெடுப்பது போலிருக்கும்
சன்னலுக்கும் இருக்குக்கைக்கும் நகருவது

பனிக்குடம் உடைந்தவள் போல
கதறியழுது கண்ணீர் ஒழுக சிரித்து
டைரியில் முகம் பார்க்கையில்

தோள் சட்டை பற்றியிழுத்து
முத்தமிட்டு கலைந்து போனது
அவனும் அவளும் தான்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets