சற்று கை அகல விரித்து
வண்ணமயமான வளையல்கள்
எழும் உரசல்களின் ஓசை அதனை
வீதியில் தெளித்தபடி
எட்டு வைத்துப் போகிறாள்
நிறைமாத கர்ப்பிணி ஒருத்தி
சாமிக்கு தரிசனம் கொடுக்க
சென்றிருக்கலாம்...
பூவும் பழமும் சிதறிய குங்குமமும்
அந்த மாலையில் சாட்சி
மஞ்சள் படர்ந்த திசை நோக்கி
ஈருயிர் கூட்டி
சாலை கடக்க எத்தனிக்கையில்
தன்னை தூக்கச் சொல்லி
முன் மறிக்கும் முதல் பிள்ளையை
இடுப்பில் ஏற்றி கடக்கிறாள்
ஒவ்வொருவர் நாசியிலும்
தாய்மையின் நுகர்வு
தாயின் நினைவு!
வண்ணமயமான வளையல்கள்
எழும் உரசல்களின் ஓசை அதனை
வீதியில் தெளித்தபடி
எட்டு வைத்துப் போகிறாள்
நிறைமாத கர்ப்பிணி ஒருத்தி
சாமிக்கு தரிசனம் கொடுக்க
சென்றிருக்கலாம்...
பூவும் பழமும் சிதறிய குங்குமமும்
அந்த மாலையில் சாட்சி
மஞ்சள் படர்ந்த திசை நோக்கி
ஈருயிர் கூட்டி
சாலை கடக்க எத்தனிக்கையில்
தன்னை தூக்கச் சொல்லி
முன் மறிக்கும் முதல் பிள்ளையை
இடுப்பில் ஏற்றி கடக்கிறாள்
ஒவ்வொருவர் நாசியிலும்
தாய்மையின் நுகர்வு
தாயின் நினைவு!
0 comments
Post a Comment