இவ்விரவில்
ஒவ்வொரு வரிகளுக்கிடையே
வந்து வந்து போகும்
பென்சில் கோடுகளூம்
மருதானி பூசிய இருவிரல்களும்
இருள் தின்று இம்சிக்கின்றது
முனை பிடித்து தலையில் அடிப்பாள்
அல்லது
விரல் மொளியில் அடிப்பாள்
கவனிக்காத தருணங்களிலும்
பென்சிலை கடிக்கையிலும்
மேசையில் கிறுக்கும் வேலையிலும்...
தன் நெஞ்சோரம்
வாய்ப்பாட்டு புத்தகத்தை சாய்த்துவிட்டு
சொல் என்பாள் சொல் சொல் என்பாள்
ஒவ்வொன்றாய் சொல்லத் துவங்கி
கடத்தும் நேரத்தில்-அவள்
வாய்க்குள் ஊறிய பென்சிலை
அவள் கண் மறைத்து
ஈரம் உலர்வதற்கு முன்னே
சட்டென வாய் நுழைக்க
"ஐய்ய எச்சி" என்பாள்
எச்சில் வடிய துயிலும்
அவள் பெயர் கொண்ட என் மகளைப் போல!
ஒவ்வொரு வரிகளுக்கிடையே
வந்து வந்து போகும்
பென்சில் கோடுகளூம்
மருதானி பூசிய இருவிரல்களும்
இருள் தின்று இம்சிக்கின்றது
முனை பிடித்து தலையில் அடிப்பாள்
அல்லது
விரல் மொளியில் அடிப்பாள்
கவனிக்காத தருணங்களிலும்
பென்சிலை கடிக்கையிலும்
மேசையில் கிறுக்கும் வேலையிலும்...
தன் நெஞ்சோரம்
வாய்ப்பாட்டு புத்தகத்தை சாய்த்துவிட்டு
சொல் என்பாள் சொல் சொல் என்பாள்
ஒவ்வொன்றாய் சொல்லத் துவங்கி
கடத்தும் நேரத்தில்-அவள்
வாய்க்குள் ஊறிய பென்சிலை
அவள் கண் மறைத்து
ஈரம் உலர்வதற்கு முன்னே
சட்டென வாய் நுழைக்க
"ஐய்ய எச்சி" என்பாள்
எச்சில் வடிய துயிலும்
அவள் பெயர் கொண்ட என் மகளைப் போல!
0 comments
Post a Comment