Pin It

Widgets

இவ்விரவில்
ஒவ்வொரு வரிகளுக்கிடையே
வந்து வந்து போகும்

பென்சில் கோடுகளூம்
மருதானி பூசிய இருவிரல்களும்
இருள் தின்று இம்சிக்கின்றது

முனை பிடித்து தலையில் அடிப்பாள்
அல்லது
விரல் மொளியில் அடிப்பாள்

கவனிக்காத தருணங்களிலும்
பென்சிலை கடிக்கையிலும்
மேசையில் கிறுக்கும் வேலையிலும்...

தன் நெஞ்சோரம்
வாய்ப்பாட்டு புத்தகத்தை சாய்த்துவிட்டு
சொல் என்பாள் சொல் சொல் என்பாள்

ஒவ்வொன்றாய் சொல்லத் துவங்கி
கடத்தும் நேரத்தில்-அவள்
வாய்க்குள் ஊறிய பென்சிலை

அவள் கண் மறைத்து
ஈரம் உலர்வதற்கு முன்னே
சட்டென வாய் நுழைக்க

"ஐய்ய எச்சி" என்பாள்
எச்சில் வடிய துயிலும்
அவள் பெயர் கொண்ட என் மகளைப் போல!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets