Pin It

Widgets

ஊரெங்கும் உடைந்தோடும்
குளத்து நீரில்
வேரோடு பிடுங்கப்பட்ட

வாழை மரத்தில்
கனைக்க மறந்தபடி
தவளை ஒன்று பயனம்

சுண்ணாம்பு சுவற்றில்
கரைந்து வடியும் செம்மண்கோடுகள்
பார்வையில் ஓவியமாக

கேசத்திலிருந்து பூச்சியெடுத்த
சவரி முடியினை அரிக்கேனிலேற்றி
வெளிச்சம் மறைத்து போட்டிருந்தாள்

பட்டென வெட்டிய மின்னல் ஒளி
சன்னல் வழி ஊடுருவ
நான்கு கால்கள் வியர்த்துக் கிடந்தது!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets