ஊரெங்கும் உடைந்தோடும்
குளத்து நீரில்
வேரோடு பிடுங்கப்பட்ட
வாழை மரத்தில்
கனைக்க மறந்தபடி
தவளை ஒன்று பயனம்
சுண்ணாம்பு சுவற்றில்
கரைந்து வடியும் செம்மண்கோடுகள்
பார்வையில் ஓவியமாக
கேசத்திலிருந்து பூச்சியெடுத்த
சவரி முடியினை அரிக்கேனிலேற்றி
வெளிச்சம் மறைத்து போட்டிருந்தாள்
பட்டென வெட்டிய மின்னல் ஒளி
சன்னல் வழி ஊடுருவ
நான்கு கால்கள் வியர்த்துக் கிடந்தது!
குளத்து நீரில்
வேரோடு பிடுங்கப்பட்ட
வாழை மரத்தில்
கனைக்க மறந்தபடி
தவளை ஒன்று பயனம்
சுண்ணாம்பு சுவற்றில்
கரைந்து வடியும் செம்மண்கோடுகள்
பார்வையில் ஓவியமாக
கேசத்திலிருந்து பூச்சியெடுத்த
சவரி முடியினை அரிக்கேனிலேற்றி
வெளிச்சம் மறைத்து போட்டிருந்தாள்
பட்டென வெட்டிய மின்னல் ஒளி
சன்னல் வழி ஊடுருவ
நான்கு கால்கள் வியர்த்துக் கிடந்தது!
0 comments
Post a Comment