Pin It

Widgets

மெளன குவியல்

Saturday, September 01, 2012 | 0 comments »

மெளனத்தின் துவாரங்கள்
கண்களில்!

சொற்குவியல்
இதயமளவில் உழலுமாயின்
மெளனம் என்று பெயரிப்படகிறது

இருள் சூழ்ந்த பொழுதொன்றினை
கடன் கொடுங்கள்
விழி மூடியும் பிரகாசமாய் கிடக்கிறது!

நினைவுப் பேழை
கைமாறுமே அன்றி
உடைவதேயில்லை!

இலையேறி பிழைத்துக் கொள்ள
நதியில் நீரில்லை
கரையில் மரமுமில்லை!

கோடையானால் என்ன
குளிரானால் என்ன
இதயம் கனக்கையில்
கண்களுக்கும் வியர்க்கும்

இயலாமையின் கால்கள்
எட்டாக
தெருவெங்கும் ஓலம்!

வளைவு படிக்கட்டின்
கைப்பிடியில்
சறுக்கிக் கொண்டு வருகிறது
சொட்டளவு கண்ணீர்!

பாதச்சுவடுகளை
அள்ளியணைக்க
விரைந்தோடுகிறது
மணல் காற்று!

சருகுகள் நிறைந்த
ஆலமரத்தடியில்
சத்தமின்றி பதுங்குகிறது
நான்கு கால்கள்!


நாளத்தின் கற்றையொன்றினை
முடிச்சிட்டு விளையாடுகிறது
வீதியில் குழந்தையொன்று!

இறக்கை முளைத்த
பாம்பொன்றின் இடுக்கில்
சிறைப்பட்டிருக்கிறது
வட்டமிடும் கழுகு ஒன்று!

நீரற்ற கிணற்றில்
சிலந்தி வலையொன்று
உடல் சூழ்ந்து கிடப்பது
போன்றொரு காட்சி கண்களில்!

விழி மூடும் தசையறுத்து
கண்விழித்து
கிடக்க சொல்கிறது மனது!

ஊரடங்கிய இரவில்
பிசாசுகள் பியித்து தின்ன
தோதுவாக நிர்வாணமாய்
நடக்க சொல்கிறது மனது

வற்றிய குளத்தில்
பிளந்து கிடக்கும்
மண் செதில்கள் போல
தசை அறுக்க சொல்கிறது மனது

அடர்த்தி மிகுந்த
கண்ணாடி பேழையினை
உடைத்திட்டு இரத்தம் ஒழுக
உறங்கிட சொல்லுது மனது

ஊறல் மிகுந்த
இலையொன்றினை
நாவில் தடவி விட்டு
அதன் அரிப்பு தாங்காது
நாவினை கடித்து துப்பிட
சொல்கிறது மனது!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets