Pin It

Widgets

காற்றினை ஆடையாக்கித்திரியும்
யாசகன் ஒருவன் வனங்களின் நடுவே
யோசனையோடு பயணிக்கிறான்

ஆம்
அவன் கடவுளிடம் யாசிப்பவன்

விலங்குகளின் புணர்வு
பறவைகளின் கூடல் கண்டவன்
கடவுளிடம் ஒரு கோரிக்கை வைக்கிறான்

அது அது அந்தந்த
இனங்களோடு புனர்ந்துத்திரிய
நான் தனித்திருப்பது ஏனோவென்று?

ஆம்
அவன் பெண்களை பார்த்திறாதவன்

உடலசைவற்ற பெண்ணொருத்தியை
அவன் கண்ணில் படச்செய்து
அதோ அவளை ரசி என்றார் கடவுள்

விரைப்படைந்து கசியத்துவங்கிய
ஆண்குறியினை கண்டவன்
அருவருப்படைந்து அலறலானான்

அவன் பெரும் கூச்சலில்
விழித்தவளின் விழி பார்த்தவன்
முலைக்காம்புகளை திருகிப்பார்கிறான்

அவனுக்கு முன்னதாகவே
படைக்கப்ட்டிருந்தவள் அவள்,
முன்னமே கடவுளிடம் கேட்டிருந்தவளாய் முன்னேறுகிறாள்

தொடுதல் தீண்டல் பசித்தல் புசித்தல்
எவ்வாறென அறியா ஈருயிருக்கும்
இலையாடையுடுத்தும் எண்ணம் புகுத்துகிறார்

இலைமறைத்திட்ட பாகங்கள்
சிந்தையில் சூடேற்ற
உடலொரு உணவாக உடலொரு பசியாக

இரவாய் பகலாய் மழையாய் குளிராய்
உஷ்ணமேற்றி உச்சவமாட
திறக்கத்துவங்கின பாதைகள்

கூடலின் நிறைவாய் அவன் எட்டிப்போவதும்
அவள் மீண்டும் வேண்டி தோற்பதும்
கடவுள் சாத்தானாக அவதரிக்கிறான்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets