Pin It

Widgets

அலையாடும் கரைதொட்டு
கால் மடக்கி
கடல்நோக்கிப் பார்த்திருந்தனர்

ஒரு
யுவன் யவதி

கரையொதுங்கிய
கிளிஞ்சல்கள் போலிருந்தது
விழியுருட்டலில்லா பார்வைகள்

இடைவெளியானது
காற்றில் பறந்து உடையும்
நீர்க்குமிழிகளின் அளவு இருந்தது

இருவரும் மெளனம் ஊட்டி
உள் அனுப்பும் கடலைகள்
இரைஞ்சி கொண்டே சொன்னது

இருவருக்குள்ளும்
யார் காதலை சொல்வதென்ற
தயக்கமாக இருக்கலாம்

அல்லது
பிரிதலுக்கு முன்னதான
வாழ்த்துரையாக கூட இருக்கலாம்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets