அலையாடும் கரைதொட்டு
கால் மடக்கி
கடல்நோக்கிப் பார்த்திருந்தனர்
ஒரு
யுவன் யவதி
கரையொதுங்கிய
கிளிஞ்சல்கள் போலிருந்தது
விழியுருட்டலில்லா பார்வைகள்
இடைவெளியானது
காற்றில் பறந்து உடையும்
நீர்க்குமிழிகளின் அளவு இருந்தது
இருவரும் மெளனம் ஊட்டி
உள் அனுப்பும் கடலைகள்
இரைஞ்சி கொண்டே சொன்னது
இருவருக்குள்ளும்
யார் காதலை சொல்வதென்ற
தயக்கமாக இருக்கலாம்
அல்லது
பிரிதலுக்கு முன்னதான
வாழ்த்துரையாக கூட இருக்கலாம்!
கால் மடக்கி
கடல்நோக்கிப் பார்த்திருந்தனர்
ஒரு
யுவன் யவதி
கரையொதுங்கிய
கிளிஞ்சல்கள் போலிருந்தது
விழியுருட்டலில்லா பார்வைகள்
இடைவெளியானது
காற்றில் பறந்து உடையும்
நீர்க்குமிழிகளின் அளவு இருந்தது
இருவரும் மெளனம் ஊட்டி
உள் அனுப்பும் கடலைகள்
இரைஞ்சி கொண்டே சொன்னது
இருவருக்குள்ளும்
யார் காதலை சொல்வதென்ற
தயக்கமாக இருக்கலாம்
அல்லது
பிரிதலுக்கு முன்னதான
வாழ்த்துரையாக கூட இருக்கலாம்!
0 comments
Post a Comment