புலராத பொழுதில்
பனிபடராத மொட்டு
நீ...
நிலவில்லா இரவில்
நடமாடும் வெண்முகில்
நீ...
அலையில்லா கடலில்
விளைந்த முத்து
நீ...
ஆளில்லா தீவில்
முளைத்த மூங்கில்
நீ...
போரில்லா நாட்டில்
பூத்த பூங்கொத்து
நீ...
தேரில்லா கோயிலில்
வலம்வரும் தேவதை
நீ...
அவிழ்க்க முடியாத
அழகிய புதிர்
நீ...
ரவிவர்மன் தூரிகையில்
தவறிய தாரகை
நீ...
செதுக்கவியலா
சிற்பம்
நீ...
எழுதவியலா கவிதையின்
அந்தாதி
நீ...
பனிபடராத மொட்டு
நீ...
நிலவில்லா இரவில்
நடமாடும் வெண்முகில்
நீ...
அலையில்லா கடலில்
விளைந்த முத்து
நீ...
ஆளில்லா தீவில்
முளைத்த மூங்கில்
நீ...
போரில்லா நாட்டில்
பூத்த பூங்கொத்து
நீ...
தேரில்லா கோயிலில்
வலம்வரும் தேவதை
நீ...
அவிழ்க்க முடியாத
அழகிய புதிர்
நீ...
ரவிவர்மன் தூரிகையில்
தவறிய தாரகை
நீ...
செதுக்கவியலா
சிற்பம்
நீ...
எழுதவியலா கவிதையின்
அந்தாதி
நீ...
0 comments
Post a Comment