எப்பொழுதும் நீ
எனக்காக விட்டுத்தரும்
சன்னலோர இருக்கையில்
காய்ந்த பருத்தி கம்பு
முந்தானை கிழித்துவிட்டதாய்
பனைமரத்தடியிலமர்ந்து சொல்லிக்கொண்டிருந்த
காட்சி படர்ந்து கிடக்கிறது
கஞ்சி வாளிக்குள் ஒவ்வொரு வெங்காயமாய்
உரித்து போட்டுவிட்டு-எனது
கால் பெருவிரலில் கசியும் குருதியில்
மணல் தெளித்து வைத்துக்கேட்டுக்கொண்டிருந் தாய்
அன்றும் சைக்கிளின் பின்னிருக்கையில்
உனக்குப் பதிலாய்
புல்கட்டினையே கிடத்திவிட்டு
பின்னர் வருவதாய் சொல்லியிருந்தாய்
உன் பாதம் அழுத்தி அழுத்தி
பிய்ந்திருந்த ஒற்றைக்கால் செருப்பினை
முருங்கை மரத்திலிருந்து அவிழ்த்து
வீட்டிற்குள் வைத்துவிட்டு
இவ்வருட தீபாவளிக்கும்
அழையாத உன் மகன் வீட்டிற்கு
சென்றுகொண்டிருக்கிறேன்!
எனக்காக விட்டுத்தரும்
சன்னலோர இருக்கையில்
காய்ந்த பருத்தி கம்பு
முந்தானை கிழித்துவிட்டதாய்
பனைமரத்தடியிலமர்ந்து சொல்லிக்கொண்டிருந்த
காட்சி படர்ந்து கிடக்கிறது
கஞ்சி வாளிக்குள் ஒவ்வொரு வெங்காயமாய்
உரித்து போட்டுவிட்டு-எனது
கால் பெருவிரலில் கசியும் குருதியில்
மணல் தெளித்து வைத்துக்கேட்டுக்கொண்டிருந்
அன்றும் சைக்கிளின் பின்னிருக்கையில்
உனக்குப் பதிலாய்
புல்கட்டினையே கிடத்திவிட்டு
பின்னர் வருவதாய் சொல்லியிருந்தாய்
உன் பாதம் அழுத்தி அழுத்தி
பிய்ந்திருந்த ஒற்றைக்கால் செருப்பினை
முருங்கை மரத்திலிருந்து அவிழ்த்து
வீட்டிற்குள் வைத்துவிட்டு
இவ்வருட தீபாவளிக்கும்
அழையாத உன் மகன் வீட்டிற்கு
சென்றுகொண்டிருக்கிறேன்!
0 comments
Post a Comment