Pin It

Widgets

பூக்களும் செதில் சூழ்ந்த மொட்டுகளும்
இலைகளும் புற்களும் நனையும்
பனிப்பொழிவு காலை அது

கண்ணாடித்திரை வழியே விரியும் காட்சியில்
காதல் செய்துகொண்டிருந்தன
இரண்டு முயல்குட்டிகள்

உடல் சூட்டினை போர்வைக்கு
பகிர்ந்திட்ட அந்த காலையில்
நிலவோடு விளையாடிக் கொண்டிருந்தன முகில்கள்

பனியடர்ந்த பேழையில் இதயம் வரைந்து
அதனுள் அவனெழுதும் அவள் பெயர் கண்டு
மின்னும் விண்மீன்கள்

அவன் அப்படித்தான்
ஓரிரவும் உறங்கமாட்டானென
சொல்லித்திரியும் பைத்தியங்கள்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets