பூக்களும் செதில் சூழ்ந்த மொட்டுகளும்
இலைகளும் புற்களும் நனையும்
பனிப்பொழிவு காலை அது
கண்ணாடித்திரை வழியே விரியும் காட்சியில்
காதல் செய்துகொண்டிருந்தன
இரண்டு முயல்குட்டிகள்
உடல் சூட்டினை போர்வைக்கு
பகிர்ந்திட்ட அந்த காலையில்
நிலவோடு விளையாடிக் கொண்டிருந்தன முகில்கள்
பனியடர்ந்த பேழையில் இதயம் வரைந்து
அதனுள் அவனெழுதும் அவள் பெயர் கண்டு
மின்னும் விண்மீன்கள்
அவன் அப்படித்தான்
ஓரிரவும் உறங்கமாட்டானென
சொல்லித்திரியும் பைத்தியங்கள்!
இலைகளும் புற்களும் நனையும்
பனிப்பொழிவு காலை அது
கண்ணாடித்திரை வழியே விரியும் காட்சியில்
காதல் செய்துகொண்டிருந்தன
இரண்டு முயல்குட்டிகள்
உடல் சூட்டினை போர்வைக்கு
பகிர்ந்திட்ட அந்த காலையில்
நிலவோடு விளையாடிக் கொண்டிருந்தன முகில்கள்
பனியடர்ந்த பேழையில் இதயம் வரைந்து
அதனுள் அவனெழுதும் அவள் பெயர் கண்டு
மின்னும் விண்மீன்கள்
அவன் அப்படித்தான்
ஓரிரவும் உறங்கமாட்டானென
சொல்லித்திரியும் பைத்தியங்கள்!
0 comments
Post a Comment